புரிதல்கள் .........
புரியாமல் போன உன்
புன்னகையின் மீதங்களை
உயிருக்குள்ளே ...
நாற்றாக நட்டுவிட்டு
காற்றினிலே தேடுகிறேன்
கடைசி நாள் கண்ணீரை
ஊற்றி ஊற்றி அதை வளர்க்க
அங்கே காய்ந்தாலும் அவை
காதலுடன்தான் இருக்கும்
வளர்வது உன் புன்னகை என்பதால்.....!
ப்ரியமுடன் சீராளன்
2 comments:
அருமையான வரிகள்....
மிக்க நன்றி புனிதா
Post a Comment