சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 25 September 2014

கவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதி



அன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும் 
முன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும் 
வள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா 
அள்ளித் தரும்பாவில் ஆடு!

ஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்
சூடும் கவிகள் சுவையூற்றே! -  நாடுவக்கும் 
பொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்! 
கன்னித் தமிழ்பேசும் காற்று!