சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 16 June 2014

நெஞ்சோடு பேசும் நினைவுகள் !





புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி    !

இன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்
கன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்
மின்னலென  மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்
இன்னுயிரை வதைக்கின்ற  இதயத்தின் ஸ்வரங்களடி  !