ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத்
தேடிக் கொடுப்பேன் தினம்!
1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து
நன்றே'கற் பித்தார் நயந்து!