பற்றில்லா வாழ்வுதனைத் தந்து மெய்யின்
பகுத்தறிவைத் தினமழித்துப் பாடை தேடும்
சுற்றங்கள் சூழ்ந்திருந்தும் சிந்தை வானில்
சுடுகாடாய் நினைவுகளும் தனிமை காக்கும்
கற்றறிந்த பாவலரும் கண்ணீர்ப் பாக்கள்
காரிகையை நினைத்தெழுதக் கருக்கள் கூட்டும்
பெற்றதாயைத் தந்தையரைப் பிரிய வைத்துப்
பெரும்பாவம் செய்விக்கும் பிணியோ காதல் !