ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப் பூங்குழலி சாய்ந்துவிடத் - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !
இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம் - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின்
ஓவியமும் கொள்ளும் உயிர் !