சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 3 July 2012

அறிவாயா அடுத்தவன் வலி ...!



கண்ணீருக்கே நான் 
சொந்தமாகிப்போனதால்
விழிகளின் நடுவே 
சமாதி கட்டுகிறேன்...
உணர்வுகள் 
மலர் வளையங்களாய்..
தலைகோதி விடுகின்றன...
சுவாசக்காற்றில் கற்பூர வாசனை...!

ஒ நான் மனதோடு 
மரணித்து விட்டேனா...
உலகியலில் இருந்து 
ஒதுங்கி விட்டேனா..
அன்று.........
நியாயப்படுத்தலின் நடுவே..
குற்றவாளியாக்கப்பட்டதே என் உயிர்..
என்னுடைய 
ஆன்ம அழுகையில் அல்லவா
ஆனந்தம் கொண்டீர்..
பிறகெதற்கு பிதிர்கடன்..!

கனவுகளுக்கு...
பாடைகட்டிய 
பரிதாபம் போக்கவா இல்லை,,
சமூக இழுக்காட்டிற்கு 
சந்தண முலாம் பூசவா..!

ஒன்றை உணர்ந்துகொள் மானிடா..
விழி களுக்கு
விடுதலை அற்ற பின்..
தூக்கம் தொலைவது நிஜாயம்தான்
கண்ணால் காணும் 
உறவினை விட காணாத உறவில்...
கருத்தொருமை பாடுகள்..
சமப்படுத்தப் படுவது...
வாஸ்தவமே ..
இருந்தும் அது இல்லாதபோது...
நீ உணர்வாய் 
இயங்கியல் இறைவனுக்கானதேன்று...
முடிந்தால் நீயும் 
கண்களுக்குள்ளே கண்ணீர் விட்டுப்பார்..
நீ அறிவாய்...........
அடுத்தவன் வலி 
எவ்வளவு வலிதான தென்று....!

ப்ரியமுடன் சீராளன்