Saturday, 19 April 2014
Tuesday, 8 April 2014
Tuesday, 18 March 2014
Friday, 28 February 2014
மௌனங்களின் மொழிபெயர்ப்பு
நாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!
மாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்
நாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே
கற்பிக்கும் வண்ணவிழி கொண்டவளே ! என்பாட்டில்
சொற்சிறக்கப் பார்ப்பாய் தொடா்ந்து !
என்னுயிரில் என்றும் எழிலாடும் உன்னுருவம்
பொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்
வண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்
கொண்டல் பொழியும் குளிர்ந்து
கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !
மொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே
அழியா நினைவால் அறுத்தாய் - இழித்தாலும்
முன்னல் எரிக்காதே மூச்சோடும் போகாதே
உன்னோ டிருந்த உறவு !
இல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம்
செல்வந்தன் சொல்லும் நெறி
கொண்டல் - மேகம்
முன்னல் - நினைவு ,நெஞ்சு
பிரியமுடன் சீராளன்
Saturday, 18 January 2014
உயிர் உருகும் வேளையிலே..!
அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!
கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !
பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம் மேனி வியர்க்கையிலே ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !
நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !
வெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !
கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும்
என்பாவுக் கென்றும் எழில்!
பிரியமுடன் சீராளன்
Wednesday, 20 November 2013
Thursday, 3 October 2013
Subscribe to:
Posts (Atom)