Monday, 25 August 2014
Wednesday, 13 August 2014
Wednesday, 2 July 2014
கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி
நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின் பட்டம் பரிசேற்று - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால் கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !
பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !
Wednesday, 25 June 2014
கேட்டாளே சில கேள்வி !
கொளுத்திப் போட்டோர் கொலுவிருக்க
இழுத்துப் போட்டு எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும் ..!
வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்
மகராசிகளா !
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்
அடக்கம் அடைதல் அழகு !
நான் அவனில்லை ! க க மு ......எப்புடி
Monday, 16 June 2014
நெஞ்சோடு பேசும் நினைவுகள் !
புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி !
இன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்
கன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்
மின்னலென மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்
இன்னுயிரை வதைக்கின்ற இதயத்தின் ஸ்வரங்களடி !
Saturday, 19 April 2014
Tuesday, 8 April 2014
Subscribe to:
Posts (Atom)