சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 27 June 2012

ஏன் எரித்தாய்...?


வெண்ணிடை கொண்ட மேகம்
பெண்ணிடை சிநேகம் கொள்ள
கண்ணிடை கசிந்த நீரும்
மண்ணிடை தழுவிக்கொள்ள....!
காற்றிடை கலைந்த கேசக்
கண்கவர் ரோஜா தாள
மேற்கோளி நிறத்தில் தேகம்
மின்மினி போல மின்ன .....!

தேரொன்று அசைவதுபோல்
திசையெங்கும் ஒளிபரவ
தேவதை நீ வந்தாய்
திகைத்து நின்றேன் உனைநோக்கி....!

நினைவெல்லாம் நீயென்று
நித்தமும் நீ சொன்னதெல்லாம்
நிலையாத கனவென்று
நிரூபிக்க வந்தாயோ...!

உன் எழில் நுதலில் மின்னுகின்ற
ஏகாந்த பொன் திலகம்
எனையன்றி யாரிட்டார்
என்னவளே சொல்லிவிடு....!

ஒருதலை காதல் இல்லை
உள்ளத்தில் எரிந்து போக
இருதலை காதலடி
இருந்துமேன் எனை எரித்தாய்....!

======================

ப்ரியமுடன் சீராளன்....

No comments: