நிஜங்களோடு
சலனப்படும் நிமிடங்கள்.......!
* * *
காற்றோடு கரையும்
கண்ணீர் துளிகள்.....!
***
வலிகளுக்கே சொந்தமான
வாழ்க்கை....!
***
போதுமடா சாமீ
உன் பிறப்பின் பயன்.....!
***
விழியை கேட்டு
அழகை நீட்டினாய்.....!
***
வழியை காட்டி
முட்கள் கொட்டினாய்....!
***
ஒளியை கொடுத்து
இருளில் முட்டினாய்....!
***
காதலை மறைத்து
கல்லறை காட்டினாய்...!
***
இத்தனைக்கும் என் செய்தேன்
உன்னால் நான் பிறப்பதற்கு.....!
****
வேண்டாம் ...
நீக்கிவிடு மீள் பிறப்பை
இல்லையேல் நிறுத்திவிடு
என் உயிர் படைப்பை...!
ப்ரியமுடன் சீராளன்
No comments:
Post a Comment