விறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட
விழியுண்ட காதல் வெடிக்கும் - மீண்டும்
பிறந்தாலும் உனதன்பை பிரியாத வரமொன்று
பிரம்மனிடம் கேட்டுத் துடிக்கும் !
தன்மானச் செருக்கென்னில் தடுத்தாலும் உன்னினைவே
தள்ளாத வயதுள்ளும் வாழும் - ஈன்ற
என்தாயின் அன்பின்றி இருந்திட்ட நாள்போல
ஏக்கங்கள் நெஞ்சை சூழும் !