சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 27 ஏப்ரல், 2013

எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!



சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்

காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்
காலை வாரா கண்ணியம்பிடிக்கும்

நேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்
நெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

என் யன்னலின் வெளியே....!




ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
என் யன்னலின் வெளியே....!