கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !
ஒவ்வொரு இறப்பிலும் உன்னதம் படரும்
ஒவ்வொரு பிறப்பிலும் உயிரினில் தொடரும்
ஒவ்வொரு நினைப்பிலும் உயிரணு சுடரும்
அவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் !