Tuesday 30 December 2014
Monday 1 December 2014
Thursday 25 September 2014
Monday 25 August 2014
Wednesday 13 August 2014
Wednesday 2 July 2014
கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி
நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின் பட்டம் பரிசேற்று - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால் கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !
பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !
Wednesday 25 June 2014
கேட்டாளே சில கேள்வி !
கொளுத்திப் போட்டோர் கொலுவிருக்க
இழுத்துப் போட்டு எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும் ..!
வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்
மகராசிகளா !
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்
அடக்கம் அடைதல் அழகு !
நான் அவனில்லை ! க க மு ......எப்புடி
Monday 16 June 2014
நெஞ்சோடு பேசும் நினைவுகள் !
புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி !
இன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்
கன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்
மின்னலென மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்
இன்னுயிரை வதைக்கின்ற இதயத்தின் ஸ்வரங்களடி !
Saturday 19 April 2014
Tuesday 8 April 2014
Tuesday 18 March 2014
Friday 28 February 2014
மௌனங்களின் மொழிபெயர்ப்பு
நாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!
மாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்
நாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே
கற்பிக்கும் வண்ணவிழி கொண்டவளே ! என்பாட்டில்
சொற்சிறக்கப் பார்ப்பாய் தொடா்ந்து !
என்னுயிரில் என்றும் எழிலாடும் உன்னுருவம்
பொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்
வண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்
கொண்டல் பொழியும் குளிர்ந்து
கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !
மொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே
அழியா நினைவால் அறுத்தாய் - இழித்தாலும்
முன்னல் எரிக்காதே மூச்சோடும் போகாதே
உன்னோ டிருந்த உறவு !
இல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம்
செல்வந்தன் சொல்லும் நெறி
கொண்டல் - மேகம்
முன்னல் - நினைவு ,நெஞ்சு
பிரியமுடன் சீராளன்
Saturday 18 January 2014
உயிர் உருகும் வேளையிலே..!
அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!
கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !
பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம் மேனி வியர்க்கையிலே ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !
நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !
வெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !
கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும்
என்பாவுக் கென்றும் எழில்!
பிரியமுடன் சீராளன்
Subscribe to:
Posts (Atom)