பிறக்கும் இந்த வருடத்தை
பீதியுற வைத்த மாயன்
இறக்கும் நிலை என்றெண்ணி
இன்பமற்றோர் மனம்குளிர
வந்துவிட்ட நன்னாளில்
வலியறுந்து அகமகிழ
வாஞ்சை யோடும்மை
வாழ்த்தி நிற்கின்றேன்
இனியில்லை அழிவென்று
இன்புற்று வாழுங்கால்
அகம்பாவம்,ஆணவங்கள்
அடிபணியா கர்வங்கள்
அனைத்தையும் அழித்திங்கே
அகிலத்தை செழிப்பாக்கி
அன்புநெறி தளைத்தோங்க
இறைதூதர் தந்தளித்த
மறைநூலை மனதேந்தி
நிறைசெல்வ செழிப்போடு
வாழ்கவென வாழ்த்துகிறேன்...!
பிரியமுடன் வாழ்த்தும் சீராளன்