சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 20 நவம்பர், 2013

மூச்சினால் முத்தமிட்டவள் ..!


]

                                     உயிரின் மொழியில் கவிதை 
                                         உனக்கென எழுதும் பொழுதில்
                                     பயிரிளம் வேரில் எல்லாம்
                                         பைந்தமிழ் பாக்கள் பூக்கும்
                                     குயிலினை மிஞ்சும் குரலில்
                                         குழவியாய் பேசும் எழிலில்
                                      பயின்றிட வாழ்வும் இனிக்கும்
                                          பாவையுன் பார்வை வரைக்கும்

வியாழன், 3 அக்டோபர், 2013

அழகிய தீயே..!




கன்னலொடு மின்னலொன்று
கதைபேசும் நேரம்-மழை
காரிருளில் ஒளிதூவும்
கண்ணிரண்டின் ஈரம்....!

மூச்சினிலே பேசுமிதழ்
முல்லைமொழி சுரக்கும்-அவள்
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!

திங்கள், 16 செப்டம்பர், 2013

உயிரைத்தொலைத்தேன் ..!


உனக்கும் எனக்கும் உள்ளப்  பொருத்தம்
உயிர்கள் இரண்டிலும்  எம்மால்  நெருக்கம் 
கண்களும் இமையும்  காதலைப்   பெருக்கும்  
கடுகைப் போலே  உன்மொழிச்  சுருக்கம்..!

திங்கள், 2 செப்டம்பர், 2013

உயிர் நழுவும் ஓசை...!



சிற்றிதழின்  சில்மிசங்கள்

முத்தத்தை நேசிக்க
பற்றிவிடும் கரங்களுக்குள்
ஒற்றைவரி கடிதம்
மூச்சில்  எழுதி
மூடியது நம் நினைவால் !

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தேவதையின் கீர்த்தனைகள்..!



கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்

தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்

ஒரு யுகத்தின் உன்னதத்தை
உன் ஓரசைவே  பேசும்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யார்மீது குற்றம் சொல்லுவதோ...!


எண்ணத்தின் தேக்கம் 
எனக்குள்ளே தேடுகின்ற 
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நிலாக் காதலன்...!


காதலித்த நாள் தொடக்கம்
கருமை  உன்னில்  கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி  நீதானோ...!

சனி, 13 ஜூலை, 2013

எனக்கான உன் காதல்...!




எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை 
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!

வெள்ளி, 12 ஜூலை, 2013

இருப்பாயா என் தேவதையாய்...!




ஒரு சொல் 
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால் 
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!

திங்கள், 27 மே, 2013

எப்போதும் உன்னருகில்..!


கோபப்படும் 
உன் மூச்சைக் கூட
குளிர்மையாக்கி என்னில் 
கொட்டிச் செல்வதால்
உன்னைவிட என்னை 
ரசிக்கத்தெரிந்தவள் தென்றல்தான் ....!

திங்கள், 20 மே, 2013

உயிரின் இதழ் நீ ..!



சொந்தத்தின் பந்தத்தில்
வந்துதித்த வளர்பிறை நீ
தந்தை வழி உறவென்று
தள்ளி நின்றாய் தாய்மடியில்...!

வெள்ளி, 17 மே, 2013

உனக்கென இருப்பேன்...!





சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட 
சித்திரம் ஒன்று 
சிதைந்தது நெஞ்சில்..!

வியாழன், 9 மே, 2013

உயிர்த்துளிகள் ..!




உயிர்த்துளி

உன் கடைசித் துளி 
கண்ணீரோடு 
எரிக்கப்பட்டதால் 
என் சாம்பல்கள் எல்லாம்
சந்தணவாசம்......!

சனி, 27 ஏப்ரல், 2013

எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!



சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்

காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்
காலை வாரா கண்ணியம்பிடிக்கும்

நேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்
நெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

என் யன்னலின் வெளியே....!




ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
என் யன்னலின் வெளியே....!

புதன், 10 ஏப்ரல், 2013

கனாக் கண்டேன் ..!



தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல் 
நேசித்த நிலவின் மடியில்
வாசித்த வாழ்க்கையிது ..!

சனி, 6 ஏப்ரல், 2013

உனை தேடும் உயிர்மூச்சு



சிப்பிக்குள் முத்தாய் 
சிந்தனைக்குள் வந்தவளே 
முத்தத்தில் வித்திட்ட 
முதல் காதல் சொர்க்கமடி...!

சனி, 30 மார்ச், 2013

வாழும்வரை தேவதையாய் ..!



தேவதையுன் நினைவுவர 
தேனூறும் கவிதைகளில்

கவிதைகளில் தேடுகின்றேன் 
கனியிதழ்கள் மௌனத்தை

மௌனத்தை சுமப்பதனால் 
மலரிதழின் வாசனைகள்

புதன், 27 மார்ச், 2013

என்னுயிர் காதலியே ...!



கற்பனையில் நீ பேச 
கவிதைகளும் மணக்குதடி 
நினைவுக்குள் நீ சுரக்க 
நித்திரைக்கு தவணை சொன்னேன்...!

ஞாயிறு, 24 மார்ச், 2013

பிரியமுள்ள நண்பனுக்கு..!



பிரியமுள்ள நண்பனுக்கு
காதல் உனக்கு பாடையல்ல
பருவத்தின் பயணம் 
தூரம் மறந்தால்
பாதைக்கு நீ பாரமில்லை
நேரத்தை நோவடித்தால்
நின்மதி உன்னை விலைபேசும்..!

சனி, 23 மார்ச், 2013

என்னை செதுக்குகிறேன் ..!





நிலாக்கால கனவுகளில் 
சில ஞாபகங்கள் 
ஆன்மாவில் கலந்த மூச்சாய் 
அடிக்கடி வந்து போகும்...!

வியாழன், 21 மார்ச், 2013

சேரும் காதல் எல்லாம் ..!




காற்றைத்தேடும் பூக்களிலே 
கனியை செருகும் ஆண்டவனே 
நோவை விலக்கும் வரம்தந்து 
சாவைக்கொடுத்திடல் சாத்தியமா...!

திங்கள், 11 பிப்ரவரி, 2013

என் உயிரின் ஓசை ..!



நன்றாய்க் கவிநல்கிட  நவின்றாள் ! மின்னும் 
பொன்னென ஒளிர்ந்தாள்  பொய்கையில் -கன்னிக் 
கனவுகள் மலர்ந்தது கண்ணில்! வாழ்ந்தேன் 
தினமொரு யுகத்தினை தின்று !

சனி, 9 பிப்ரவரி, 2013

ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!



அன்றுமட்டும் 
உன் 
வண்ணவிழி பேசும் 
வார்த்தைகள் குளிரவில்லை 
எண்ணமொழி பேசும் 
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!

வியாழன், 7 பிப்ரவரி, 2013

காதல் விடும் கண்ணீர் ..!



வாழ்வின் 
ஒவ்வொரு நொடிகளும் 
ஏதோ ஒன்றுக்கான 
ஏமாற்றங்களை சுமந்தபடி...!

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

என்னவள் திருமணத்தில் ...!



தேன்துளி கலந்த தென்றல் 
தேவதைமேல் வீசிவர 
வான்வெளி பனிபொழிந்து 
வாசலிலே கோலமிடும் ..!

சனி, 26 ஜனவரி, 2013

கனவுகள் சுகமே...!


சிறகும் முளைக்கா 
சிட்டுக்குருவி 
திசைகள் தேடி 
நிலத்தில் பறக்கும் 
உறவை விட்டு 
உள்ளம் பிரிக்க 
பிறவிக்காதல்  
பெரும்பங்காற்றும் 

வியாழன், 24 ஜனவரி, 2013

காதலின் ராகத்தில் ..!


தேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால் 
பொன்னெழில் கொண்டு ஊனோடு என் 
உடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள் 
விடலைக் கண் விழித்து .!

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....!


திறந்த 
மனப்புத்தகத்தில் 
தீர்க்கப்படாத 
கேள்விகள் உன் 
மௌனங்களின் 
மொழிபெயர்ப்பை 
தேடியே....!

வியாழன், 10 ஜனவரி, 2013

தினம்தோறும் ராத்திரியில் ...!


தாயமுதத் தாகத்தில் 
சேயழுத கண்ணீராய் 
வாயடைத்தும் வெளிக்கசியும் 
வழமையான வலிச்சாரல் ...!

வியாழன், 3 ஜனவரி, 2013

புரியவில்லை புலன்களுக்கு ...!


வார்த்தையொன்று கவிதையாகி 
வாழ்வில் வந்தது 
சேர்க்கையற்ற  வெறுமை தந்து 
தேகம் சுட்டது..!

புதன், 2 ஜனவரி, 2013

இதயத்தின் இரேகைகளில்...!


விழிகள் பரப்பிய 
திசைகள் எல்லாம் 
விதைத்த நம் வேதனைகள் 
வேருக்குள் பூக்கையிலும் 
வாசம் சுமக்கும்..!