தேனடை போலிளம் பேச்சுக ளும்!-அதில்
தேங்கிம கிழ்ந்திடும் மூச்சுக ளும்!
கானலாய்ப் போயின காட்சிக ளாய்!-அதன்
கற்பனை வாழுது நீட்சிக ளாய்!
மூச்சற வைத்தவுன் மோனங்க ளும்!-அதில்
மூழ்கிய ழிந்திட்ட கானங்க ளும்!
பேச்சறு பட்டவன் பாசைக ளாய்! -மீதம்
பேசிய டங்கிடும் ஓசைக ளாய்!
கோபக்க ணைவீசத் தேவையில் லை! - மீண்டும்
குற்றுயி ராகிட ஆசையில்லை !
ஞாபக மொன்றுயிர் வாழட்டுமே !- உன்
நட்புக ளாலிதம் சூழட்டுமே!
சென்றுவா! தென்றலே நேரமில்லை- உன்
சீண்டலி னித்தொட ஏதுமில்லை!
வென்றுவா! வாழ்வென வாழ்த்துகி றேன்-உன்
வேதமொ ழிக்குயிர் போர்த்துகி றேன்!
4 கருத்துகள்:
அருமை பாவலரே
எழுத்தின் நிறம் விழிகளுக்கு இடையூறாக உள்ளது.
அடுத்த முறை வேறு நிறம் தேர்வு செய்யவும் நன்றி.
அருமை
வணக்கம் ஜி !KILLERGEE Devakottai
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்,
//எழுத்தின் நிறம் விழிகளுக்கு இடையூறாக உள்ளது.
அடுத்த முறை வேறு நிறம் தேர்வு செய்யவும் நன்றி.//
கண்டிப்பாக கவனத்தில் எடுக்கிறேன் தற்போது மாற்றிவிட்டேன்
நன்றி
வணக்கம் கரந்தை மைந்தரே !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
கருத்துரையிடுக