சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday, 11 February 2013

என் உயிரின் ஓசை ..!



நன்றாய்க் கவிநல்கிட  நவின்றாள் ! மின்னும் 
பொன்னென ஒளிர்ந்தாள்  பொய்கையில் -கன்னிக் 
கனவுகள் மலர்ந்தது கண்ணில்! வாழ்ந்தேன் 
தினமொரு யுகத்தினை தின்று !

Saturday, 9 February 2013

ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!



அன்றுமட்டும் 
உன் 
வண்ணவிழி பேசும் 
வார்த்தைகள் குளிரவில்லை 
எண்ணமொழி பேசும் 
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!

Thursday, 7 February 2013

காதல் விடும் கண்ணீர் ..!



வாழ்வின் 
ஒவ்வொரு நொடிகளும் 
ஏதோ ஒன்றுக்கான 
ஏமாற்றங்களை சுமந்தபடி...!

Sunday, 3 February 2013

என்னவள் திருமணத்தில் ...!



தேன்துளி கலந்த தென்றல் 
தேவதைமேல் வீசிவர 
வான்வெளி பனிபொழிந்து 
வாசலிலே கோலமிடும் ..!

Saturday, 26 January 2013

கனவுகள் சுகமே...!


சிறகும் முளைக்கா 
சிட்டுக்குருவி 
திசைகள் தேடி 
நிலத்தில் பறக்கும் 
உறவை விட்டு 
உள்ளம் பிரிக்க 
பிறவிக்காதல்  
பெரும்பங்காற்றும் 

Thursday, 24 January 2013

காதலின் ராகத்தில் ..!


தேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால் 
பொன்னெழில் கொண்டு ஊனோடு என் 
உடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள் 
விடலைக் கண் விழித்து .!

Sunday, 20 January 2013

உன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....!


திறந்த 
மனப்புத்தகத்தில் 
தீர்க்கப்படாத 
கேள்விகள் உன் 
மௌனங்களின் 
மொழிபெயர்ப்பை 
தேடியே....!